கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம் செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டுள்ளது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசுகின்றனர்.
இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வருகின்றனர்.
அதாவது ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஜூம் செயலியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஜூம் செயலி உருவாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, அதாவது 2011 ஆம் ஆண்டு உருவான இந்த செயலி, பிரபலமாக பல வருடங்கள் பிடித்தது. 2013 ஆம் ஆண்டில் இருந்து வீடியோ சந்திப்பு சேவையை வழங்கியதன் மூலமே இது பயனர்களைப் பெற்றது.

தற்போது ஜூம் வீடியோ சந்திப்புகளில், அந்நிய நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதுகுறித்த சர்ச்சைகள் அதிகரித்த நிலையில் அந்நிறுவனம் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் ஒப்புக் கொண்டு, அவற்றை சரிசெய்வதில் உரிய கவனம் செலுத்தி வரு கிறது.
இந்தநிலையில் ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. பள்ளி சிறுமிகளுடன் புவியியல் பாடத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் போது திரைகளில் ஆபாச படங்கள் தோன்றியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தைவானும், ஜெர்மனியும் ஏற்கனவே ஜூம் செயலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஆல்பாபெட்டின் Google ஜூம், டெஸ்க்டாப் பதிப்பை கார்ப்பரேட் மடிக்கணினிகளில் இருந்து தடை செய்துள்ளது.