டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் சரி என்பதுபோல் வீடியோ ஒன்று வெளியாக, ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பயனர்கள் பலரும் கூறி வருகின்றனர். பலர் இந்த சம்பவத்திற்குப் பின்னர் தொடர்ந்து அன் இன்ஸ்டால் செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக அளவில் டவுண்ட்லோடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, அதாவது டிக் டாக் போன்றே அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலி விரைவில் டிக் டாக்கின் இடத்தினைப் பிடித்துவிடும் என்று கூறப்பட்டு வந்தது.
அதாவது ஒரே மாதத்தில் இந்த மித்ரன் செயலியினை 50 லட்சம்பேர் டவுண்ட்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகி இந்தியர்களுக்கு ஷாக் ஆகியுள்ளது.

ஆமாங்க இந்த மித்ரன் செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி கிடையாது என்றும், பாகிஸ்தான் மென்பொருன் டெவெலப்பரான க்யூபாக்சஸிடமிருந்து வாங்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பாகிஸ்தான் நிறுவனமான Qboxus ஆல் உருவாக்கப்பட்ட இந்த செயலி குறித்த தகவல்கள் வெளியான நிலையில் இந்தியர்கள் பலர் இதனை ட்வுண்ட்லோடு செய்வதை நிறுத்தியும் உள்ளனர்.
மிட்ரான் ஆப்பிற்கு எந்தவிதமான தனியுரிமைக் கொள்கையும் இல்லை, மேலும் இந்த செயலி மிகவும் தரமற்றதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன்பின்னர் இந்தியாவில் இதற்கான வரவேற்பு முன்புபோல் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.