தொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் இருப்பது ஏர்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் பல வருடங்களாக போராடி பெற்ற இடத்தை ஜியோ நிறுவனம் சில ஆண்டுகளுக்குள் பிடித்து விட்டது.
அதற்குக் காரணம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களை ஜியோ அறிவித்ததே ஆகும்.
இதனால் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் என பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு போர்ட் அவுட் செய்ய, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அற்புதமான பல திட்டங்களை அறிவித்து வந்தனர்.

அந்த வகையில் ஜியோ நிறுவனம் தற்போது ரூ. 49 மற்றும் ரூ. 69 விலையில் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது இந்தத் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ. 49 என்ற விலையில் ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் கால்ஸ், 2 ஜி.பி. டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 25 எஸ்.எம்.எஸ். போன்றவற்றினை வழங்குகிறது.
ரூ. 69 என்ற விலையில் ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் கால்ஸ், 7 ஜி.பி. டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான எண்களுக்கு 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 25 எஸ்.எம்.எஸ். போன்றவற்றினை வழங்குகிறது. ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.