இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தற்போது எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினையும், மேலும் இது 2520 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது, எச்டிஆர் 10+ ஆதரவினைக் கொண்டுள்ளது, இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 108எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 25எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.