மொபைல் போனை எவ்வாறு கனமழையில் இருந்து பாதுகாப்பது?. அப்படி நாம் வெளியே செல்லும் போது, மொபைல் போன் மழையில் நனைந்து விட்டால் என்ன செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மொபைல் போனை மழையில் உபயோகிப்பது எப்படி?
1. மொபைல் போன் ஒருவேளை தண்ணீரில் நனைந்து விட்டால், உடனடியாக அதன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு உள்ளிட்டவைகளை முழுவதுமாக கழற்றி காய வைக்க வேண்டும்.
2. போன் முழுவதுமாக காய்ந்தவுடன் சுத்தமான துணியை வைத்து போனை துடைக்க வேண்டும்.

3. ஹேர் டிரையர் வைத்து மொபைல் போனை காய வைக்க கூடாது. இதனால் போனுக்கு ஆபத்து நேரிடலாம். இது போனை எரித்து விடவும் செய்யும்.
4. மொபைல் போனை ஈரமாக இருக்கும் அரிசியில் போட்டு வைத்தால் அதன் ஈரத்தை அரிசி எடுத்து விடும்.
5. மொபைல் போன் ஈரமாக இருக்கும் போது அதனை சார்ஜ் செய்ய கூடாது.
6. இடி, மின்னல் போன்றவற்றில் சற்று உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், மின்னல் தாக்கி போன் செயலிழந்து போவதுடன் நமக்கும் ஊரு விளைவிக்கும்.