சாம்சங் நிறுவனம் ஜனவரி மாதம் புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M315F கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, அதிலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமரா அமைப்பினைக் கொண்டிருக்கும்.
மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமரா கொண்டதாகவும் இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.