கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் அலுவலகங்களைத் திறக்கவில்லை என்றாலும், அவர்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஊழியர்களும் கடந்த 5 மாத காலமாக தங்களது நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அதன்படி பணியாற்றிவரும் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்களைத் திறக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ட்விட்டரும் கூட, கொரோனா வைரஸ் ரீதியான ஊரடங்கு முடிந்தாலும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியது.
இதன்படி பேஸ்புக் நிறுவனமும் அதன் பயனர்களுக்கு ஊழியர்களுக்கு நற்செய்தி ஒன்றினை அறிவித்துள்ளது. அதாவது பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் இன்னும் ஓராண்டுக்கு அலுவலகம் வரத் தேவையில்லை, அதாவது 2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் வீட்டில் வேலை செய்வதற்காக தேவைப்படும் பொருட்களுக்கான செலவுகளுக்கான தொகையினை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.