பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் தனது அபினந்தன் ரூ.151/- திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
கடந்த மாதம் அறிமுகமான இந்த பிஎஸ்என்எல் திட்டமானது, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வந்தது.

டெல்லி மற்றும் மும்பை வட்டங்கள் உட்பட எந்தவொரு நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்பு நன்மைகளை வழங்கும் இந்த ரூ.151/- திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 36 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பான 1.5 ஜிபி என்கிற அளவை அடைந்த பிறகு, இணைய வேகமானது 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று அறிமுகமான இந்த திட்டமானது, அடுத்த 90 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு விளம்பர சலுகை ஆகும். இந்த திட்டம் புதிய, இடம்பெயர்ந்த மற்றும் ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் பொருந்தும்.