உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 32,24,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,28,908 பேர் உயிர் இழந்துள்ளனர்.
உலகினை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கால் பதித்து தலை விரித்தாடுகிறது. இதுவரை இந்தியாவில் 33,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத துவக்கத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற செயலியினை அறிமுகம் செய்தது. அதாவது இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்வதன் மூலம், நாம் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது இந்த செயலியில் பதிவாகி இருக்கும்.

தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்த செயலியினை சிறப்பாகப் பயன்படுத்தியதோடு, அதன் அடிப்படையில் வெற்றியும் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த செயலியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, கொரோனா அறிகுறிகள், கொரோனா பாதித்தோர் நிலவரம் என கொரோனா குறித்த பலவிதமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த செயலியினை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த செயலியினை பதிவிறக்கம் செய்து உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அடுத்து அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் மீண்டும் தயாரிப்பை துவங்கும்போது இந்த செயலியினை நிச்சயம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.