மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் எந்த நிறுவனம் எவ்வளவு வாடிக்கையாளர்களை வைத்துள்ளது என்ற
புள்ளி விவரத்தை வெளியிட்டது.
டிராய் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, வோடபோன் ஐடியா நிறுவனம் 387.55 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஜியோ நிறுவனம் 322.98 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஏர்டெல் 320.38 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று மூன்றாம்
இடத்தில் உள்ளது. மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 115.90 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
அதன்படி முதல் இடத்தில் வோடபோன் ஐடியாவும், இரண்டாம் இடத்தில் ஜியோவும் உள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தாவினாலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளதாக ஜியோ வருத்தத்தில் உள்ளது.
வோடபோனை முதலிடத்திலிருந்து பின் தள்ளி முதல் இடத்தினைப் பிடிக்க பல முயற்சிகளை ஜியோ செய்து வருகிறது. அதன்படி, ஜியோவின் ப்ளான்களில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளன.
இதன்மூலம் நிச்சயம் மக்களைக் கவர்ந்து முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பதே ஜியோவின் குறிக்கோள்.