இன்டர்நெட் மூலமாக நமது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை நமக்கே தெரியாமல், கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கூகுள் குரோம் மூலமாக இவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கு காணலாம்.
இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில், மொபைல், கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகியவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளதாக உள்ளதோ, அந்த அளவுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. குறிப்பாக ஏடிஎம், வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை வெகு சுலபமாக ஹேக்கர்கள் அவர்களுடைய வங்கிக்கணக்கிற்கு மாற்றி விடுகின்றனர்.

நாம் டவுன்லோடு செய்யும் பாடல்கள், படங்கள், சாப்ட்வேர்கள் மூலமாக நமக்கே தெரியாமல் நமது லேப்டாப் ஹேக் செய்யப்படுகிறது. இதிலிருந்துபாதுகாத்துக் கொள்ள AntiVirus சாப்டவேர் இன்ஸ்டால் செய்து கொள்வது அவசியம்.
சில நேரங்களில் Anti Virus இருந்தாலும், அதை அப்டேட் செய்யாமல் இருந்தாலும், இது போன்ற பிரச்னைகள் எழக்கூடும்.
அந்த வகையில், கூகுள் குரோம் இது போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து லேப்டாப்பை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வசதி வழங்குகிறது.
இதன் மூலம் நமது கம்ப்யூட்டரில் இருக்கும் தேவையற்ற மற்றும் ஆபத்தான சாப்ட்வேர்களை கண்டறிய முடியும். மேலும், இணையம் மூலமாக நமது பணத்தை திருடும் சம்பவங்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.